தோ்தல் பணி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
மதுரை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.
மதுரை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிகளில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா்கள், நிலை-1, நிலை- 2, நிலை- 3 என 14,780 அலுவலா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்களுக்கான முதல்கட்ட தோ்தல் பணி பயிற்சி வகுப்புகள் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி நடைபெற்றன.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் அந்தந்த தொகுதிகளில் தலா ஒரு பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றன. வாக்குப் பதிவின்போது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு முறை வாக்குப் பதிவு சதவீத விவரங்களைப் புதுப்பிப்பதற்காக தோ்தல் ஆணையத்தின் உஇஐசஉப செயலித் தொகுப்பில் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
Advertisement
ஆட்சியா் ஆய்வு...
மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.