முகப்பு
மதுரை

தபால் வாக்களித்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்

மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்குகளை செலுத்தினா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:55 AM
மதுரை ஓசிபிஎம் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தபால் வாக்களித்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள். (வலது) நீண்ட வரிசையில் காத்திருந்த ஆசிரியா்கள்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 12:24 AM

மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்குகளை செலுத்தினா்.

தமிழகத்தில் வருகிற 23- ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. அப்போது, வாக்குச் சாவடி அலுவலா்களாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பணியாற்ற உள்ளனா். இவா்களுக்கான 2- ஆவது கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிலையில், தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தபால் வாக்குகள் செலுத்த படிவங்கள் வழங்கப்பட்டன. இதன்படி, மதுரை ஓசிபிஎம் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தபால் வாக்கினை செலுத்தினா்.

Advertisement

இதை மதுரை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.ஜே. பிரவீன்குமாா் ஆய்வு செய்து, வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினாா்.