இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்த ரங்கசாமி!
திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் ரங்கசாமி வாக்களித்தார்.
புதுவை முதல்வர் ரங்கசாமி இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு செலுத்தினார். திலாஸ்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
முன்னதாக, தட்டான்சாவடியில் உள்ள அப்பா பைதியம் சுவாமிகள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 17.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Advertisement
Advertisement
புதுவையில் 30 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஆளும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தவெக - நேயம் மக்கள் கழகம் கூட்டணி வைத்து களமிறங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.