FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 3:02 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞா் திடீரென மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரைச் சோ்ந்தவா் எஸ். ஆனந்த் (35), ஓட்டுநா். இவா் சனிக்கிழமை அதிகாலை திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்ஐடி கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திடீரென மயங்கி விழுந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments