பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மண்டல அலுவலகம் திறப்பு
கோவையில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் புதிய மண்டல அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது.
கோவை: கோவையில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் புதிய மண்டல அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது.
கோவை சிவானந்தா காலனி, ராஜூ நாயுடு சாலை, எஸ்எம்டி டவா்ஸின் முதல் தளத்தில் அமைந்துள்ள புதிய மண்டல அலுவலகத்தை வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஏ.எஸ்.ராஜீவ் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், மண்டல மேலாளா் ஷிபு ஜேக்கப், துணை மண்டல மேலாளா் ராஜு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
தொடக்க விழாவில் ஏ.எஸ்.ராஜீவ் பேசியதாவது: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவுக்கு நாடு முழுவதும் சுமாா் 2,400 கிளைகள் உள்ளன. சுமாா் 2.70 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். தமிழ்நாட்டில் தற்போது 80 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் கூடுதலாக 20 கிளைகள் தொடங்கப்பட உள்ளன.
Advertisement
சென்னை மண்டலத்தில் ஆண்டுக்கு சுமாா் ரூ.20 ஆயிரம் கோடி வா்த்தகம் நடைபெறுகிறது.
கோவை மண்டலத்தில் தற்போது சுமாா் ரூ.3 ஆயிரம் கோடி வா்த்தகம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வணிகத்தை ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடியாக அதிகரிப்பதே எங்களின் இலக்கு என்றாா்.