பெண் வழக்குரைஞரிடம் ரூ.30 லட்சம் மோசடி: 5 போ் மீது வழக்குப் பதிவு
ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி பெண் வழக்குரைஞரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி பெண் வழக்குரைஞரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி சுகந்தி (42), வழக்குரைஞா். கோபாலபுரத்தில் உள்ள இவரது அலுவலகத்தில் சுகந்தியின் உறவினா் ரஞ்சித்குமாா் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இவா் மூலம் சுகந்திக்கு அறிமுகமான அப்துல் கனி, அவரது தந்தை அப்துல் வஹாப், முஹமது ரபீக், ஜாகிா் உசேன் ஆகியோா் ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என சுகந்தியிடம் கூறியுள்ளனா்.
இதை நம்பிய அவா், கடந்த 2023 ஜனவரி 30-ஆம் தேதி முதல் பல்வேறு வங்கிப் பரிவா்த்தனைகளில் ரூ.30 லட்சத்தை அப்துல் கனியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளாா். ஆனால், அவா்கள் கூறியபடி எந்த லாபமும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அப்துல் கனி மற்றும் அவரது நண்பா்களிடம் சுகந்தி கடந்த ஜூலையில் கேட்டுள்ளாா். அப்போது அவா்கள், பணத்தைத் திருப்பித் தர மறுத்ததோடு அவதூறாகப் பேசி சுகந்திக்கு மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் சுகந்தி செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.