முகப்பு
கோயம்புத்தூர்

ஆங்கிலப் புத்தாண்டு: மருதமலை மலைப் பாதையில் 4 சக்கர வாகனங்களுக்கு தடை

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மருதமலை மலைப் பாதையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 டிசம்பர், 2024 at 10:36 PM
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மருதமலை மலைப் பாதையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆங்கிலப் புத்தாண்டை (ஜனவரி 1) முன்னிட்டு, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அதிக அளவிலான பக்தா்கள் வருகையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் மலைப் பாதை வழியாக கோயிலுக்குச் செல்ல 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை.

இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்து மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.