கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை Din
கோயம்புத்தூர்

கோவை: குடிபோதையில் ரகளை செய்தவர் பலி; இளைஞர் கைது!

கோவையில் குடிபோதையில் ரகளை செய்தவர் உயிரிழந்தது பற்றி...

DIN

கோவை: கோவை ரயில் நிலையம் அருகே குடிபோதையில் ரகளை செய்தவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ரயில் நிலையம் அருகே ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள டீக்கடைக்கு வெளியே 30 வயது இளைஞர் ஒருவர் குடிபோதையில் ரகளை செய்துள்ளார். கால்களில் சாக்குப் பையை மாட்டிக் கொண்டு குதிப்பது, சப்தம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், டீக்கடைக்கு வருபவர்களுக்கு இடையூறு செய்ததால், அந்த கடையில் பணிபுரிந்த அன்வர் உசேன் (வயது 22) என்பவர் குடிபோதையில் பிரச்னை செய்தவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த வாக்குவாதம் சண்டையாக மாற, குடிபோதையில் இருந்தவரை அன்வர் கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் காயமடைந்தவரை மீட்டு அப்பகுதியினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதுகுறித்து புளியங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சமயந்தி, கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அன்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கக்கடலில் உருவானது மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

குழப்பங்கள் தீரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

SCROLL FOR NEXT