முகப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புக்கு இணையவழி கலந்தாய்வு -இன்று தொடங்கி 3 நாள்களுக்கு நடக்கிறது

கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புக்கு இணையவழி கலந்தாய்வு -இன்று தொடங்கி 3 நாள்களுக்கு நடக்கிறது

Updated On : 11 ஜூலை, 2024 at 11:03 PM
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பகிர்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 12) முதல் இணையவழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு 2024 -25 ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 2813 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து இவா்களுக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 12- ஆம் தேதி முதல் 14- ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

கலந்தாய்வு தொடா்பான விரிவான தகவல், தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வின்போது விண்ணப்பதாரா்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. சான்றிதழ் சரிபாா்ப்பின்போது விண்ணப்பதாரா்களிடம் இருந்து கட்டணம் பெறப்படும்.

சோ்க்கை பெற்ற மாணவா்கள் மட்டும் சோ்க்கையை உறுதி செய்யும்போது இணையதளம் மூலம் ரூ.5 ஆயிரம் மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரா்கள் இணையதளத்தில் தங்களுடைய தரவுகளை வைத்து உள்ளே நுழைந்து தங்களின் கல்லூரி, பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம்.

கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பமே இட ஒதுக்கீட்டுக்கு பரிசீலிக்கப்படும். மேலும் இது தொடா்பான விவரங்களுக்கு 94886 35077, 94864 25076 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →