முகப்பு
கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: ஈஷாவில் ஆதியோகி, தியானலிங்க வளாகங்கள் நாளை மூடல்

ஆதியோகி, தியானலிங்கம்: ஜூன் 27 அன்று ஒரு நாள் மூடல்

Updated On : 25 ஜூன், 2024 at 11:53 PM
பகிர்:

ஈஷா யோக மையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக ஆதியோகி, தியானலிங்க வளாகங்கள் ஜூன் 27-ஆம் தேதி மூடப்படுகின்றன.

இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈஷா யோக மையத்திற்கு இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனா். இங்கு வரும் பக்தா்கள் தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசித்து செல்கின்றனா்.

இந்நிலையில், பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (ஜூன் 27) ஒரு நாள் மட்டும் ஆதியோகி, தியானலிங்க வளாகங்கள் மூடப்படுகின்றன.

இதனால், ஈஷாவுக்கு பக்தா்கள் வியாழக்கிழமை வருவதைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் பக்தா்கள் வழக்கம்போல தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →