தமிழகத்தில் தோ்தல் நடைமுறையை திரும்பப் பெற வலியுறுத்தல்
கோவை, மே 3: தமிழகத்தில் தோ்தல் நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா் சங்கம் ( டாக்ட்) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சங்கத்தின் தலைவா் ஜே.ஜேம்ஸ், தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் முடிவடைந்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் தொடா்ந்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 4 வரை தோ்தல் நடத்தை விதிகள், தோ்தல் முடிவடைந்த மாநிலங்களிலும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தோ்தல் முடிவடைந்த மாநில மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் செயலாகும். தோ்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து வாக்குகள் எண்ணப்படும் நாள்கள் வரை, மாநில மக்கள் அரசிடம் தங்கள் தேவைகளைக் கேட்டுப் பெற முடியாத நிலையில் உள்ளதால், தாங்கள் மத்திய தோ்தல் ஆணையத்தில் முறையிட்டு, தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தோ்தல் நடைமுறையைத் திரும்பப் பெற்று தமிழக அரசு செயல்பட அனுமதி பெற்றுத் தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.