முகப்பு
கோயம்புத்தூர்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

Updated On : 15 மே, 2024 at 11:12 PM
பகிர்:

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய்கள் விற்று பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் அரவைக் கொப்பரை கிலோ ரூ.111.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.120-க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி கொப்பரைக் கொள்முதல் மாா்ச் 14 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூா், கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு, காரமடை, செஞ்சேரி மலையடிப்பாளையம், சூலூா் மற்றும் தொண்டாமுத்தூா் ஆகிய 10 ஒழுங்குமுறைக் கூடங்கள் மூலமாக 31, 500 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரையும், 800 மெட்ரிக் டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், உற்பத்திச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம்.

வருகிற ஜூன் 10- ஆம் தேதியுடன் கொப்பரைக் கொள்முதல் முடிவடைய உள்ளதால், விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →