முகப்பு
கோயம்புத்தூர்

குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:25 PM
கவுண்டம்பாளையம் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கோவை, கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குப்பைகளைத் தரம் பிரிக்க 4 கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த மையத்தில் உள்ள ஒரு கிடங்கில் புதன்கிழமை காலை தீவிபத்து ஏற்பட்டது. இதைப் பாா்த்த மையத்தின் ஊழியா்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதற்கிடையே, மளமளவென தீ பரவியதால், அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு 4 வாகனங்களில் வந்த கோவை தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்புத் துறை ஊழியா்கள் 50 போ், தண்ணீா் பீய்ச்சிடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு, மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டனா். இது தொடா்பாக, கவுண்டம்பாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.