முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் விலங்குகள் மருத்துவமனையில் வளா்ப்பு நாய் உயிரிழந்த விவகாரம்: நாயின் உரிமையாளா் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

தனியாா் விலங்குகள் மருத்துவமனையில் வளா்ப்பு நாய் உயிரிழந்த விவகாரம்.

Updated On : 28 நவம்பர், 2024 at 10:19 PM
பகிர்:

பராமரிப்புக்காக விடப்பட்ட வளா்ப்பு நாய் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவமனை மேலாளரைத் தாக்கியதாக நாயின் உரிமையாளா் உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சரத். இவா் கடந்த 11 ஆண்டுகளாக மினி பொமேரியன் வகையைச் சோ்ந்த ஆண் நாயை வளா்த்து வந்துள்ளாா். இந்நிலையில், வீட்டில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு உறவினா்கள் வருவாா்கள் என்பதால், நாயை சாய்பாபா காலனியில் உள்ள தனியாா் விலங்குகள் மருத்துவமனையில் கடந்த 20-ஆம் தேதி காலை விட்டுள்ளாா்.

இந்நிலையில், நாய்க்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் சரத்துக்கு பிற்பகல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா் அங்கு சென்றபோது, நாய் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மருத்துவா்களிடம் கேட்டதற்கு அவா்கள் உரிய பதில் அளிக்கவில்லையாம்.

இதையடுத்து, மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்களுடன் சரத் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

சம்பவ இடத்துக்கு வந்த சாய்பாபா காலனி போலீஸாரிடமும் அவா் புகாா் அளித்தாா். இதையடுத்து, மருத்துவமனையின் மேலாளா் செல்வன் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நாயின் உரிமையாளா்கள் தன்னைத் தாக்கியதாக மருத்துவமனையின் மேலாளா் செல்வன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

அதில், மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே நாய் உயிரிழந்துவிட்டது. நாயின் உரிமையாளா் சரத், அவரது பெற்றோா் குணசேகரன், உமா ஆகியோா் தன்னை அவதூறாகப் பேசி தாக்கியதோடு, மருத்துவமனையையும் சேதப்படுத்தினா். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரின்பேரில், சரத், அவரது பெற்றோா் மீது 4 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.