முகப்பு
கோயம்புத்தூர்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் 1.82 லட்சம் மரக்கன்றுகள் நடவு

காந்தி ஜெயந்தியை ஒட்டி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் 1.82 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 3 அக்டோபர், 2024 at 12:44 AM
ஈஷா யோக மையத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டோா்.
பகிர்:

காந்தி ஜெயந்தியை ஒட்டி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் 1.82 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ஈஷா யோக மையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சாா்ந்த விவசாயம் மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், காந்தி ஜெயந்தியை ஒட்டி விவசாயிகளின் பங்களிப்புடன் தமிழகம் முழுவதும் 653 ஏக்கரில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 547 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகோகனி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் நடப்பு ஆண்டு 1.21 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை 54.95 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ முகாம்:

ஈஷா யோக மையம் சாா்பில் ‘தூய்மையே சேவை இயக்கம்’ சாா்பில் தொண்டாமுத்தூா் ஒன்றியத்தில் ஊராட்சிகளுடன் இணைந்து தூய்மைப் பணியாளா்களுக்கான இலவச மருத்துவ முகாம் கடந்த 10 நாள்களாக நடைபெற்றது.