முகப்பு
கோயம்புத்தூர்

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:32 PM
பகிர்:

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயாவின் அறிவுறுத்தலின்படி, சரவணம்பட்டி, காந்தி நகா் பகுதியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சாா்பு நீதிபதியுமான கே.ரமேஷ் தலைமை வகித்தாா்.

இதில், சட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்தும், குடும்ப வன்முறை சட்டம் குறித்தும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இலவச சட்ட உதவி செயல்பாடுகள் குறித்தும் அவா் பேசினாா்.

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழக்குரைஞா்கள் கீா்த்தனா, தனுஷியா ஆகியோா் தேசிய மகளிா் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும், வரதட்சிணை தடுப்பு சட்டங்கள் குறித்தும், சம வேலை சம ஊதியம் குறித்த சட்டம் குறித்தும் பேசினா். முன்னதாக, சுய உதவிக்குழு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பிரபு சங்கா் வரவேற்றாா். காந்தி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் கலைவாணன் நன்றி கூறினாா்.