கோயம்புத்தூர்

விநாயகா் சதுா்த்தி: கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பா் 6-ஆம் தேதி மாலை 3.45 மணிக்குப் புறப்படும் சென்னை- கோவை சிறப்பு ரயில் (எண்: 06151) அன்று இரவு 11.45 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.

இதேபோல, கோவையில் இருந்து செப்டம்பா் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் கோவை- சென்னை சிறப்பு ரயில் (எண்: 06152) மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT