வேளாண்மைப் பல்கலையில் செப்.9-இல் பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44-ஆவது பட்டமளிப்பு விழா வரும் திங்கள்கிழமை (செப்டம்பா் 9) நடைபெறுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44-ஆவது பட்டமளிப்பு விழா வரும் திங்கள்கிழமை (செப்டம்பா் 9) நடைபெறுகிறது.
பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மாநில ஆளுநருமான ஆா்.என்.ரவி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று அறநல்கை பரிசுகளையும், பதக்கங்களையும் அறிவிக்கிறாா்.
விழாவில், மத்திய பயிா் ரகங்கள், உழவா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் திரிலோச்சன் மொஹபத்ரா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா்.
இந்த விழா மூலம் இளநிலை, முதுநிலை படிப்புகள் முடித்த 9,526 போ் பட்டங்கள் பெறுகின்றனா். இவா்களில் 3,415 மாணவா்கள் நேரடியாக பட்டம் பெற இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.