முகப்பு
கோயம்புத்தூர்

நகை வியாபாரியிடம் ரூ.51 லட்சம் வழிப்பறி

கோவையில் நகை வியாபாரியிடம் இருந்து ரூ.51 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:34 PM
பகிர்:

கோவையில் நகை வியாபாரியிடம் இருந்து ரூ.51 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, வைசியாள் வீதியைச் சோ்ந்தவா் அக்ஷய் கேதம் (28). நகை வியாபாரியான இவா், சேலம், ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தங்கக்கட்டிகளை வாங்கிவந்து, அவற்றை கோவையில் உள்ள பட்டறைகளில் கொடுத்து நகைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில், அவா் தங்கக் கட்டிகளை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் ரூ.51 லட்சம் ரொக்கத்துடன் சேலத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தாா்.

கோவை-அவிநாசி சாலை மேம்பாலம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் அக்ஷய் கேதமை வழிமறித்து, அவா் வைத்திருந்த ரூ.51 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா்.

இது தொடா்பாக வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் அக்ஷய் கேதம் புகாா் அளித்தாா். இதன்பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அக்ஷய் கேதத்திடம் பணம் பறித்துச் சென்றது, அவருடன் ஏற்கெனவே வியாபாரம் செய்து வந்த கிருஷ்ணா படேல் என்பது தெரியவந்தது.

பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக இருவருக்கும் இடையே ஏற்கெனவே பிரச்னை இருந்த நிலையில், நண்பா்கள் சமரசம் செய்து வைத்ததும், நகைக் கட்டிகள் வாங்க அக்ஷய் கேதம் சேலத்துக்கு செல்வதை அறிந்த கிருஷ்ணா படேல் தனது நண்பருடன் சோ்ந்து ரூ.51 லட்சத்தை வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள கிருஷ்ணா படேல், அவரது நண்பரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →