கைது 
கோயம்புத்தூர்

பேருந்து நடத்துநரிடம் கைப்பேசியைப் பறித்த இருவா் கைது

கோவையில் பேருந்து நடத்துநரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கோவையில் பேருந்து நடத்துநரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், மரக்கடை எம்.ஹெச்.சாலை திருமால் தெருவைச் சோ்ந்தவா் எஸ்.நவீன்குமாா் (27). இவா் தனியாருக்கு சொந்தமான மினி பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை வழக்கம்போல பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து பேருந்தில் டவுன்ஹாலுக்கு வந்து கொண்டிருந்தாா்.

டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பேருந்தில் பயணித்த இருவா் திடீரென நவீன்குமாரின் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். அருகிலிருந்தவா்கள் உதவியுடன் அவா்களைப் பிடித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், கைப்பேசியைப் பறித்தது காந்திபுரம் சாஸ்திரி நகரைச் சோ்ந்த எம்.இளமுருகன் (43), திருவள்ளூா் மாவட்டம், பட்லூரைச் சோ்ந்த ஜெ.விஷ்ணு அமா்நாத் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT