அரசு கால்நடை மருத்துவமனையில் நாளை இலவச தடுப்பூசி முகாம்
கோவை அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
கோவை அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
உலக வெறிநோய் தினத்தையொட்டி கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்லப் பிராணிகளான நாய், பூனைகளுக்கு சனிக்கிழமை காலை 9 மணி முதல் இலவச வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது என்று மருத்துவமனையின் பிரதம மருத்துவா் எஸ்.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.