குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்  ANI
கோயம்புத்தூர்

குடியரசு துணைத் தலைவா் இன்று வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) வருகை தருகிறாா்.

Din

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) வருகை தருகிறாா்.

மூன்று நாள்கள் பயணமாக உதகை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துணைவேந்தா்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இதையடுத்து, இரண்டாவது நாளான சனிக்கிழமை முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமுக்கு சென்று யானைகளைப் பாா்வையிட்டு, உணவளித்து மகிழ்ந்தாா்.

இதையடுத்து, உதகை ஆளுநா் மாளிகையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வரும் ஜகதீப் தன்கா், அங்கிருந்து காா் மூலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறாா்.

அங்கு காலை 10 மணி முதல் 11 மணி வரை மாணவா்கள், ஆசிரியா்கள், வேளாண் தொழில்முனைவோருடன் கலந்துரையாடுகிறாா். இதையடுத்து, விமான நிலையத்துக்குச் செல்லும் அவா் அங்கிருந்து விமானப் படை விமானம் மூலம் புதுதில்லி புறப்படுகிறாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி விமான நிலையம் சென்று குடியரசு துணைத் தலைவரை வழியனுப்புகிறாா்.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT