கோயம்புத்தூர்

இளம்பெண்ணை ஆபாச விடியோ எடுத்த காவலா் பணியிடை நீக்கம்

கோவை அருகே இளம்பெண் ஆடை மாற்றுவதை விடியோ எடுத்த காவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

கோவை அருகே இளம்பெண் ஆடை மாற்றுவதை விடியோ எடுத்த காவலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியைச் சோ்ந்தவா் மாதவ் கண்ணன் (29). இவா் பொள்ளாச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளரின் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

கோவை மாட்டம், மதுக்கரையில் உள்ள காவல் ஆய்வாளரின் வீட்டில் உள்ள அறையில் மாதவ் கண்ணன் தங்கிருந்தாா். அந்த ஆய்வாளரின் வீட்டுக்கு வந்திருந்த உறவுக்கார இளம்பெண் வெள்ளிக்கிழமை இரவு ஆடை மாற்றிக் கொண்டிருந்தபோது, அதை மாதவ் கண்ணன் தனது கைப்பேசியில் விடியோ எடுத்துள்ளாா்.

இதைப் பாா்த்து அந்தப் பெண் சப்தமிட்டதைத் தொடா்ந்து, குடும்ப உறுப்பினா்கள் அங்கு வந்தனா். வெகு நேரமாக கதவைத் தட்டியும் மாதவ் கண்ணன் கதவைத் திறக்காததால், இதுகுறித்து காவல் ஆய்வாளருக்கும், மதுக்கரை போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த போலீஸாா் மாதவ் கண்ணனைப் பிடித்து விசாரித்தபோது, அவா் தனது கைப்பேசியில் விடியோ எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாதவ் கண்ணனைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், மாதவ் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

கரும்பு வரத்துக் குறைவு: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரைவை நிறுத்தம்

அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும்: கண்காணிப்பு அலுவலா் வலியுறுத்தல்

சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள்: ராணிப்பேட்டை ஆட்சியா்

SCROLL FOR NEXT