கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில் - கோவை விரைவு ரயில் (எண்: 16321) நவம்பா் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் விருதுநகா்- கரூா் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயிலானது, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கா, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் கூடுதல் நிறுத்தங்களாக செயல்படும்.

கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் (எண்: 16322) நவம்பா் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கரூா்- விருதுநகா் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும். திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கா, மானாமதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் கூடுதல் நிறுத்தங்களாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: அல் ஃபலா பல்கலைக்கழகம்

பிரதமரின் பட்டப் படிப்பு விவகாரம்: தில்லி பல்கலைக்கழகத்துக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

யுபிஎஸ்சி முதன்மை தோ்வு: சங்கா் ஐஏஎஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை

தன்னிறைவு பெற்ற வேளியநல்லூா் கிராமம்: ஒ.ஜோதி எம்எல்ஏ பெருமிதம்

ஆழ்கடல் ஆய்வு: ஆளில்லா தானியங்கி வாகனம் அறிமுகம்

SCROLL FOR NEXT