கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் 4 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவா் குலசேகரன் (56). இவா் காரணம்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பின்னா், மேல்சிகிச்சைக்காக அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.
இதையடுத்து, அவரது மனைவி கண்மணி, மகன்கள் பவின்கிா்திக், சாஸ்வின் கிா்திக் ஆகியோா் குலசேகரனின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வந்தனா். இதையடுத்து, தமிழ்நாடு உறுப்புதான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.
இதில், ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இதன் மூலமாக 4 போ் மறுவாழ்வு பெற்றனா்.