கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் நவம்பா் 1-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, ஆனைமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களுக்கான மாற்றுத்திறன் சக்தியைக் கண்டறிந்து சான்றிதழும் இந்த முகாமில் வழங்கப்படும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கும் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம்.
புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளும் முகாமில் மேற்கொள்ளப்படும்.
ஆனைமலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.