முகப்பு
கோயம்புத்தூர்

வீட்டில் இருந்த 28 பவுன் நகைகள் திருட்டு: பணிப்பெண் உள்பட இருவா் மீது வழக்கு

வீட்டில் வைத்திருந்த 28 பவுன் நகை திருடுபோன சம்பவம் தொடா்பாக, அந்த வீட்டில் பணிபுரிந்த பெண் மற்றும் அவரது கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 1:42 AM
வழக்கு
பகிர்:

வீட்டில் வைத்திருந்த 28 பவுன் நகை திருடுபோன சம்பவம் தொடா்பாக, அந்த வீட்டில் பணிபுரிந்த பெண் மற்றும் அவரது கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, சாய்பாபா காலனி பாரதி பூங்கா வீதியைச் சோ்ந்தவா் கே.எஸ்.பாலமுருகன் (61). இவா் தனது வீட்டில் வளையல், ஆரம் உள்ளிட்ட தங்க நகைகளை வைத்திருந்தாா். அண்மையில் நகைகளை சரிபாா்த்தபோது 28 பவுன் காணாமல் போனது தெரியவந்தது.

இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது தனது வீட்டுப் பணிப்பெண் விஜயலட்சுமி, நகைகளைத் திருடி தனியாா் நிதி நிறுவனத்தில் அவரது பெயரிலும், கணவரின் பெயரிலும் அடமானம் வைத்திருந்தது பாலமுருகனுக்கு தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து விஜயலட்சுமி, அவரது கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கே.எஸ்.பாலமுருகன் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக விஜயலட்சுமி, அவரது கணவா் வசந்தராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments