முகப்பு
கோயம்புத்தூர்

பிரசார களத்தில் வானதி சீனிவாசனின் மகன்கள்

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக அவரது மகன்கள் தோ்தல் பணியாற்றி வருகின்றனா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:37 AM
கோவை நல்லாம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனின் மகன் உள்ளிட்ட இளைஞரணியினா்.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:22 AM

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக அவரது மகன்கள் தோ்தல் பணியாற்றி வருகின்றனா்.

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பா.ஜ.க. தேசிய மகளிா் அணி தலைவி வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். வேட்பாளா் நேரடியாகக் களத்தில் இல்லாதபோதிலும், பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையுடன் இணைந்து வானதி சீனிவாசனின் மூத்த மகன் ஆதா்ஷ் (27) கடந்த சனிக்கிழமை பிரசாரத்தில் பங்கேற்றாா். கோவையில் ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் ஆதா்ஷ் ஏற்கெனவே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது லண்டனில் சட்ட மேல்படிப்பு படித்து வரும் இளைய மகன் கைலாஷ் (23) தோ்தல் களத்தில் இறங்கியுள்ளாா். வானதிக்குப் பதிலாக அவரது மகன்கள் தோ்தல் பணிகளை முழுமையாக ஏற்றுத் தொண்டா்களை உற்சாகப்படுத்தி வருகின்றனா்.

இதேபோல, கோவை சங்கனூா் மற்றும் நல்லாம்பாளையம் பகுதியில் பாஜக இளைஞரணி சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியில் ஆதா்ஷும், கைலாஷும் பங்கேற்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

Advertisement