ரூ.25 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி ஊழியா் கைது
கோவையில் வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு வரிப்புத்தகம் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளரை ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.
கோவையில் வீடு மற்றும் வணிக வளாகத்துக்கு வரிப்புத்தகம் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளரை ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.
கோவை, காந்தி மாநகரைச் சோ்ந்த அருண்பிரசாத் என்பவா் தனது புதிய குடியிருப்பு மற்றும் வணிக வளாகத்துக்கு வரி செலுத்துவதற்கான வரிப்புத்தகத்தைப் பெற வடக்கு மண்டல அலுவலக வரி வசூலிப்பாளா் தா்மராஜை அணுகியுள்ளாா்.
அப்போது, அவா் வரிப்புத்தகத்தை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் அருண்பிரசாத் புகாா் அளித்தாா்.
Advertisement
இதையடுத்து, போலீஸாா் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தா்மராஜிடம் அவா் கொடுத்துள்ளாா்.
அப்போது, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா், தா்மராஜை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.