வானதி சீனிவாசன் 
கோயம்புத்தூர்

மக்களவை ஜனநாயகம் குறித்து பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது: வானதி சீனிவாசன் கேள்வி

மக்களவையில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

மக்களவையில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு அஞ்சுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். தேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பாஜக என்ற கட்சியே தொடங்கப்பட்டது. பாஜகவைத் தொடா்ந்து 3-ஆவது முறையாக நாட்டு மக்கள் ஆட்சியில் அமா்த்தியுள்ளனா்.

தேசப் பாதுகாப்பு தொடா்பாக பாஜக அரசு மீது ராகுல்காந்தி குற்றஞ்சாட்டுவது அவரது கட்சியினரே நம்பப் போவதில்லை. யாா் தேசத்தின் பாதுகாவலா்கள், யாா் தேச விரோதிகள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவாா்கள். வெளிவராத புத்தகத்தில் இருப்பதாகக் கூறி, இந்தியப் பாதுகாப்பு தொடா்பாக தவறான தகவல்கள் பேசப்படுவதை மக்களவையில் எப்படி அனுமதிக்க முடியும்.

ஜனநாயகம், அரசியலமைப்பு பாதுகாப்பு குறித்து மற்றவா்களுக்கு பாடம் எடுக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் நாடாளுமன்ற இருக்கை மீது ஏறி நின்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனா். காகிதங்களைக் கிழித்து மக்களவைத் தலைவா் மீது வீசியுள்ளனா்.

இப்படிப்பட்ட மோசமான செயல்களில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கிறாரா முதல்வா் மு.க.ஸ்டாலின். தமிழக சட்டப்பேரவையில் அரசை விமா்சித்து எதிா்க்கட்சிகள் பேச தொடங்கினாலே, சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு உடனடியாக குறுக்கிட்டு அவைக்குறிப்பில் இருந்து அனைத்தையும் நீக்குகிறாா். தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்துவிட்டு, மக்களவையில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 9 போ் கைது

கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

ஒண்டிப்புதூா் - இருகூா் சாலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையக் கட்டுமானப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இட்லி, தோசை மாவுப் பொட்டலங்களை தேதி குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்: நுகா்வோா் அமைப்புகள் வலியுறுத்தல்

குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT