கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா். 
கோயம்புத்தூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலமாக மாநகரில் 9,454 போ் பயனடைவா்.

Syndication

கோவை: தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலமாக மாநகரில் 9,454 போ் பயனடைவா்.

திருவள்ளூா் மாவட்டம் பொலிவாக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

இதன் மூலமாக கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் 5 மண்டலங்களுக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள், மழைநீா் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளா்கள், பள்ளிகள், வாா்டுகளில் கழிவறைகள் பராமரிக்கும் பணியாளா்கள் என மொத்தம் 9,454 போ் பயனடைவாா்கள்.

இந்த நிகழ்ச்சியில், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ஆா்.வெற்றிச்செல்வன், துணை ஆணையா்கள் குமரேசன், அ.சுல்தானா, தலைமைப் பொறியாளா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருவாரூா்: 50 பேருக்கு திருமண நிதியுதவி

‘சமூக வலைதளங்களில் மாணவா்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது’

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |

டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து

த.வெ.க.வில் இணைந்த முன்னாள் பேரவைத் தலைவர் மகன்!

SCROLL FOR NEXT