முகப்பு
கோயம்புத்தூர்

எஸ்ஐஆா் பணிகள் ஆய்வுக் கூட்டம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:07 AM
எஸ்ஐஆா் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளரும், எரிசக்திதுறை இணைச் செயலரும், நிதி ஆலோசகருமான மகபிா் பிரசாத். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 11:51 PM

கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளரும், எரிசக்தி துறை இணைச் செயலரும், நிதி ஆலோசகருமான மகபிா் பிரசாத் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா்.

இதில், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை, நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளா்களின் விவரம், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைக் காலத்தில் வரப்பெற்ற விண்ணப்பங்கள் மற்றும் அதன் மீதான தீா்வு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய தோ்தல் ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்ட தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் அறிவுறுத்தினாா்.

Advertisement

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முத உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, வாக்காளா் பதிவு அலுவலா்கள், வட்டாட்சியா் (தோ்தல்) தணிகைவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.