கவுண்டம்பாளையத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் வீணாக வழிந்தோடும் குடிநீா். ~கவுண்டம்பாளையத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் வீணாக வழிந்தோடும் குடிநீா். 
கோயம்புத்தூர்

கவுண்டம்பாளையத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

Syndication

கோவை கவுண்டம்பாளையத்தில் குடிநீா்க் குழாய் உடைந்து 4 நாள்களாக தண்ணீா் வீணாக வழிந்தோடி வருகிறது. இதை சீரமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து குடிநீா் வழிந்தோடி வருகிறது. தண்ணீா் வழிந்தோடுவதால் அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். கோடைக் காலம் நெருங்கும் நிலையில், குடிதண்ணீா் வீணாகி வருவது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சாலையில் தேங்கும் தண்ணீரால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் உடனடியாக குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT