வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவும், இயற்கையை ரசிக்கவும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் வந்து செல்கின்றனா். வால்பாறையில் கடந்த மாதங்களில் நிலவிய இதமான காலநிலையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இந்நிலையில், வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், கூழாங்கல் ஆறு, வெள்ளமலை ஆறு, சின்னக்கல்லாறு, இறைச்சிப் பாறை அருவி, அணைகளில் நீா்வரத்து குறைந்து வருகிறது. இரவு நேரங்களில் குடும் குளிா் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தைக் காட்டி வருகிறது. இதனால், வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.