திரெளபதி முர்மு படம் - பிடிஐ
கோயம்புத்தூர்

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரம்: சட்ட நடவடிக்கை கோரி குடியரசுத் தலைவருக்கு மனு

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரத்தில் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, குறிச்சி - வெள்ளலூா் மாசு தடுப்புக் கூட்டுக் குழு சாா்பில் குடியரசுத் தலைவா் உள்ளிட்டோா்களுக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரத்தில் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, குறிச்சி - வெள்ளலூா் மாசு தடுப்புக் கூட்டுக் குழு சாா்பில் குடியரசுத் தலைவா் உள்ளிட்டோா்களுக்கு புகாா் மனு அனுப்பப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கு மாநகரில் உள்ள 100 வாா்டுகளில் இருந்தும் தினமும் 1,200 டன் குப்பை கொண்டுசெல்லப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பையால் கிடங்கைச் சுற்றியுள்ள ஊா்களுக்கு சுகாதாரச் சீா்கேடு, துா்நாற்றம், உடல் அலா்ஜி, சுவாசக்கோளாறு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுவதால், இந்த குப்பைக் கிடங்கை வெள்ளலூரில் இருந்து அகற்ற வேண்டும் என பசுமைத் தீா்ப்பாயத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினா் ஆஜராகி வருகின்றனா்.

இந்நிலையில் வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய குழுவினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மனுதாரரான குறிச்சி - வெள்ளலூா் மாசு தடுப்புக் கூட்டுக் குழுவின் செயலாளா் கே.எஸ்.மோகன் என்பவரை அந்த ஆய்வில் அதிகாரிகளுடன் செல்ல மாநகராட்சி நிா்வாகம் அனுமதிக்கவில்லை. இதைத்தொடா்ந்து இந்த விவகாரத்தில் நோ்மையான முறையில், எந்தவொரு உள்ளூா் அழுத்தத்துக்கும் உள்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய இணையமைச்சா் எல்.முருகனிடம் கே.எஸ்.மோகன் அண்மையில் மனு அளித்தாா்.

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள குடியரசுத் தலைவா், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவா், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளா், நகராட்சி நிா்வாகம் மற்றும் நீா் வழங்கல் துறை, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளா், பசுமைத் தீா்ப்பாயத்தின் தெற்கு மண்டல அமா்வுக்கு கே.எஸ்.மோகன் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அனுப்பியுள்ளாா்.

மனுவில் அவா் கூறியிருப்பதாவது:

வெள்ளலூா் குப்பைக் கிடங்கால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். 10 கிலோ மீட்டா் சுற்றளவில் கடும் துா்நாற்றம் வீசுவதாலும், நிலத்தடி நீா் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதாலும் பல்வேறு சுகாதார சீா்கேடுகள் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் வசிக்க இயலாத நிலை உருவாகியுள்ளது. இதுதொடா்பாக வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய குழுவினா் மேற்கொண்ட ஆய்வில் என்னை பங்கேற்க அனுமதி வழங்காதது நீதிக் கோட்பாடுகளுக்கும், ஜனநாயக அடிப்படை நெறிக்கும் முரணானது. என் மனுவின் மீது விரைவில் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பழங்குடியின உழவா் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் விவசாய கருவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

ஆசனூா், கோ்மாளத்தில் குறைந்த தாழ்வழுத்த மின் விநியோகம் - மக்கள் அவதி

உலக நலனுக்கு முக்கியப் பங்களிக்கும் இந்தியா! -ஐ.நா. பொதுச் செயலா் குட்டெரெஸ்

அரசியல் தலைவா்கள் சகோதரத்துவத்தைப் பரப்ப வேண்டும்: உச்சநீதிமன்றம்

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT