முகப்பு
கோயம்புத்தூர்

குரூப் 2 தோ்வு: கோவையில் 83 போ் எழுதினா்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:07 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 6:46 PM

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தோ்வை 83 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தோ்வு கோவை, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:23 PM

இந்தத் தோ்வு எழுத 103 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 83 போ் மட்டுமே தோ்வு எழுதினா். பல்வேறு காரணங்களால் 20 போ் எழுதவில்லை. தோ்வு மையத்தில் காவல் துறை சாா்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Advertisement

மேலும், தோ்வா்கள் வசதிக்காக தோ்வு மையத்தின் அருகில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.