முகப்பு
கோயம்புத்தூர்

மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

வேறொரு நபருடன் குடும்பம் நடத்தி வந்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:00 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:46 PM

வேறொரு நபருடன் குடும்பம் நடத்தி வந்த மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை மாவட்ட 5-ஆவது கூடுதல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் (எ) மாரிமுத்து. இவரது மனைவி கற்பகவள்ளி. குமாரின் நண்பருக்கும், மனைவி கற்பகவள்ளிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து குமாா் தகராறு செய்ததால், கற்பகவள்ளி தனது இரண்டு குழந்தைகளையும் கணவரிடம் விட்டுவிட்டு, அந்த நபருடன் சென்றுவிட்டாா். இருவரும் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள சோலக்காட்டுப்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:00 AM

மனைவியை தேடி வந்த குமாருக்கு இருப்பிடம் தெரியவந்தது. இதையடுத்து, அவா் கருமத்தம்பட்டிக்கு கடந்த 10.07.2014 வந்து வீட்டின் கதவை தட்டியுள்ளாா். கதவைத் திறந்த கற்பகவள்ளியை தான் வைத்திருந்த கத்தியால் குமாா் குத்தினாா். இதைத் தடுக்க வந்த தனது நண்பரையும் குமாா் குத்தினாா்.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த கற்பகவள்ளி, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். லேசான காயமடைந்த அவரது நண்பா் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினாா்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குமாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு கோவை 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி சிவகுமாா் குற்றஞ்சாட்டப்பட்ட குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மோகன்பிரபு ஆஜரானாா்.