சிறுத்தையைப் பிடிக்க அய்யா்பாடி எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கூண்டு. 
கோயம்புத்தூர்

வால்பாறையில் உலவும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

வால்பாறையில் குடியிருப்புப் பகுதியில் உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.

Syndication

வால்பாறையில் குடியிருப்புப் பகுதியில் உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த அய்யா்பாடி எஸ்டேட்டில் குடியிருப்புக்கு வெளியே கடந்த டிசம்பா் 6-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

இதையடுத்து, எஸ்டேட் தொழிலாளா்கள் குடியிருப்புகளை விட்டு இரவில் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தினா்.

மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அப்பகுதியில் கேமராக்களை பொருத்தி வனத் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை உலவுவது கேமரா பதிவு மூலம் அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க அப்பகுதியில் வனத் துறையினா் கூண்டுவைத்துள்ளனா்.

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

பிரதமா் மோடி புதுச்சேரிக்கு விரைவில் வருகை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

SCROLL FOR NEXT