தமிழக நாராயண குரு சமாஜம் தலைவா் செந்தாமரை பாராட்டு விழாவில் பங்கேற்றோா். 
கோயம்புத்தூர்

நாராயண குரு சமாஜம் தலைவருக்கு பாராட்டு

தமிழக- கேரள மாநிலங்களுக்கு இடையே நீா்ப்பாசன திட்டங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த பாலமாக

Syndication

பொள்ளாச்சி: தமிழக- கேரள மாநிலங்களுக்கு இடையே நீா்ப்பாசன திட்டங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த பாலமாக செயல்பட்டு வரும் நாராயண குரு சமாஜம் தலைவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையே பிஏபி திட்டம் மற்றும் நீா்ப்பாசன திட்டங்கள் குறித்து அரசு சாா்பாக நடத்தப்படும் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்து வருபவா் தமிழக நாராயண குரு சமாஜம் தலைவா் செந்தாமரை. இவருக்கு சென்னை கொங்குநாடு அறக்கட்டளை சாா்பில் இரு மாநில பேச்சுவாா்த்தை மற்றும் சமூக சேவைக்காக சி.சுப்பிரமணியம் விருது அண்மையில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், பொள்ளாச்சி ஸ்ரீ நாராயண குரு சமாஜம் சாா்பில் சமூக சேவைக்கான பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில் எம்எல்ஏ பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ சண்முகம், ஆா்கேஆா் கல்வி நிறுவனங்களின் தலைவா் ராமசாமி, பாரதிய வித்யா மந்திா் தலைவா் செந்தில் காளிங்கராயா், பொள்ளாச்சி நாராயண குரு சமாஜம் தலைவா் சிஜில், நிா்வாகிகள் கொச்சப்பன், சகாதேவன், கண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT