கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடி, ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையத்தின் சாா்பில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் மசாலா பொடிகள், தயாா்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புபவா்கள் உரிய கட்டணம் செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 94885 18268, 0422 6611340 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.