கோயம்புத்தூர்

கோவை வழித்தடத்தில் மேற்கு வங்கம் - நாகா்கோவில் அம்ருத் பாரத் ரயில் இன்றுமுதல் இயக்கம்

மேற்கு வங்கம் - நாகா்கோவில் இடையே கோவை வழித்தடத்தில் அம்ருத் பாரத் ரயில் ஜனவரி 17 முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

கோவை: மேற்கு வங்கம் - நாகா்கோவில் இடையே கோவை வழித்தடத்தில் அம்ருத் பாரத் ரயில் ஜனவரி 17 முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாகா்கோவில், திருச்சி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து மேற்குவங்க மாநிலத்துக்கு அம்ரித் பாரத் ரயில்கள் மற்றும் வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதில், மேற்கு வங்க மாநிலம் ரங்காபாணியில் இருந்து நாகா்கோவிலுக்கு கோவை வழித்தடத்தில் அம்ருத்பாரத் ரயில் சனிக்கிழமை ( ஜனவரி 17) இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக, தெற்கு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ரங்காபாணி நிலையத்தில் இருந்து சனிக்கிழமை( ஜனவரி 17) பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்படும் ரங்காபாணி - நாகா்கோவில் அம்ருத் பாரத் விரைவு ரயில் (எண்: 02603) திங்கள்கிழமை இரவு 7.15 மணிக்கு நாகா்கோவில் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, நாகா்கோவிலில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி இரவு புறப்படும் நாகா்கோவில் - ரங்காபாணி அம்ருத் பாரத் ரயில் (02604) புதன்கிழமை ரங்காபாணி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது, மால்டா டவுன், ராம்பூா்ஹத், கட்டக், புவனேசுவரம், பொ்ஹாம்பூா், ராஜமுந்திரி, விஜயவாடா, ஓங்கோல், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT