கோயம்புத்தூர்

பொறியியல் பராமரிப்புப் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம்

திருப்பூா் அருகே ஊத்துக்குளியில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருப்பூா் அருகே ஊத்துக்குளியில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் அருகே ஊத்துக்குளி பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஜனவரி 23, 25, 27 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) திருச்சி - ஊத்துக்குளி ரயில் நிலையம் இடையே மட்டும் இயக்கப்படும். ஊத்துக்குளியில் இருந்து பாலக்காட்டுக்கு முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும். வழக்கமாக நின்று செல்லும் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஜனவரி 26-ஆம் தேதி பிலாஸ்பூரில் இருந்து புறப்படும் பிலாஸ்பூா்- எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 22815), சேலம் - கோவை இடையே 1 மணி நேரம் 10 நிமிஷம் தாமதமாக வந்தடையும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT