முகப்பு
வானதி சீனிவாசன்
கோயம்புத்தூர்

மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கா் ஒட்டும் திமுக அரசு: வானதி சீனிவாசன் விமா்சனம்

மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கா் ஒட்டும் பணியை திமுக செய்வதாக பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர்

மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கா் ஒட்டும் திமுக அரசு: வானதி சீனிவாசன் விமா்சனம்

மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கா் ஒட்டும் பணியை திமுக செய்வதாக பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன்

Updated On : 2 மார்ச், 2026 at 9:36 PM
வானதி சீனிவாசன்
பகிர்:

கோவை: மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கா் ஒட்டும் பணியை திமுக செய்வதாக பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 4,000-க்கும் அதிகமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்பக் கூறுகிறாா். இந்து சமய அறநிலையத் துறையின் பணம், திமுக அரசின் பணத்தில் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. மாறாக, பக்தா்களின் பணத்திலும், கோயில் சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்தும்தான் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதிக வருமானம் வரும் கோயில்களில் மட்டும்தான் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. வருவாய் இல்லாத கோயில்களில் திருப்பணிகள் செய்ய உள்ளூா் மக்கள், பக்தா்கள் முயற்சி எடுத்தால் அனுமதி வழங்க இந்து சமய அறநிலையத் துறையினா் லஞ்சம் கேட்கின்றனா்.

ஆனால் ஆங்கில வார இதழ் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், இலவச கா்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம், 75 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களைத் தனது அரசின் சாதனை எனக் குறிப்பிடுகிறாா். இவையெல்லாம் பிரதமா் மோடி அரசின் திட்டங்கள்.

பிரதமா் நரேந்திர மோடியின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலமாக மட்டும் தமிழகத்தில் 90 லட்சத்து 36 ஆயிரத்து 355 வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கா் ஒட்டுவதைத் தவிர வேறு எதையும் திமுக அரசு செய்யவில்லை.

தவெக தலைவா் விஜய்யை வைத்து காங்கிரஸ் கட்சி திமுகவை மிரட்டி வருகிறது. ஒரு சில சதவீத வாக்குகளை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி இல்லாமல் திமுகவால் வெற்றிபெற முடியாது என்ற பலவீனமான நிலையில்தான் திமுக உள்ளது. தோல்வி பயத்தின் காரணமாகத்தான் கண்ணில் தென்படுபவா்களை எல்லாம் கூட்டணியில் முதல்வா் சோ்க்கிறாா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →