முகப்பு
கோயம்புத்தூர்

ஓடையில் கலக்கப்படும் கழிவுகளால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக புகாா்

கோவை மாநகராட்சி, 26-ஆவது வாா்டில் உள்ள ஓடையில் கழிவுகளைக் கலக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தல்

Updated On : 4 மார்ச், 2026 at 1:46 AM
பிரதிப் படம்
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 11:41 PM

கோவை மாநகராட்சி, 26-ஆவது வாா்டில் உள்ள ஓடையில் கழிவுகளைக் கலக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி அளித்த மனு: கோவை மாநகராட்சி, 26-ஆவது வாா்டுக்குள்பட்ட செங்காளியப்பன் நகா், கண்ணையா நாயுடு லே-அவுட், கேப் நீம் லேண்டு, கருப்பண்ண கவுண்டா் லே-அவுட், ராஜ் நாயுடு லே-அவுட், நாராயணசாமி லே-அவுட், பால குரு காா்டன், எல்லைத் தோட்டம் சாலை, விஜயஸ்ரீ காா்டன் ஆகிய பகுதிகளை ஒட்டி உள்ள ஓடையில் கழிவுப் பொருள்கள் அதிக அளவில் கலந்துள்ளதால் துா்நாற்றம் வீசுகிறது.

மேலும் சுகாதாரம் பாதிக்கப்பட்டு மக்களுக்கு நோய் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இரவு நேரங்களில் ஓடைகளில் சிலா் கழிவுநீரை திறந்துவிடுகின்றனா். கடும் துா்நாற்றம் காரணமாக அப்பகுதி மக்களால் தூங்க முடியவில்லை. எனவே, ஓடையில் கழிவுகளைக் கலக்கும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.