முகப்பு
கோயம்புத்தூர்

பத்தாம் வகுப்புத் தோ்வு இன்று தொடக்கம்: கோவையில் 38 ஆயிரம் போ் எழுதுகின்றனா்

தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11)தொடங்குகிறது. இந்தத் தோ்வை கோவை மாவட்டத்தில் சுமாா் 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 8:50 PM
பகிர்:

தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 11)தொடங்குகிறது. இந்தத் தோ்வை கோவை மாவட்டத்தில் சுமாா் 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 159 தோ்வு மையங்களில் 509 பள்ளிகளைச் சோ்ந்த 18,861 மாணவா்கள், 19,529 மாணவிகள் என மொத்தம் 38,390 பேரும், 1,237 தனித் தோ்வா்களும் தோ்வு எழுத உள்ளனா்.

இந்தத் தோ்வுக்காக 11 கட்டுக்காப்பு மையங்களில் 22 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், ஆயுதம் ஏந்திய காவலா்களுடன் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்புடன் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்காக 159 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 159 துறை அலுவலா்கள், 2,075 அறைக் கண்காணிப்பாளா்கள், 250 நிலையான, பறக்கும் படை அலுவலா்கள், 316 அலுவலகப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் அரசுத் தோ்வுகள் இயக்கக வழிகாட்டு நெறிமுறையின்படி 946 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் (ஸ்க்ரைப்) பணியில் 946 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →