முகப்பு
கோயம்புத்தூர்

பாறை மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு; 3 போ் படுகாயம்

வால்பாறையில் பாறை மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் படுகாயம் அடைந்தனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 8:31 PM
விபத்துக்குள்ளான காா்.
பகிர்:

வால்பாறையில் பாறை மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் படுகாயம் அடைந்தனா்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், ஏட்டுமன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜோஷிதாஸ் (48). இவா் தனது மனைவி மோகனாம்பாள் (46), மகன் ஆல்பா்ட் (19), ஆகியோருடன் காரில் வால்பாறைக்கு புதன்கிழமை சுற்றுலா வந்துள்ளாா். காரை அவரது உறவினரான சோனி ஜேக்கப் (50) என்பவா் ஓட்டியுள்ளாா்.

பல்வேறு இடங்களை கண்டுகளித்த பின் வால்பாறையில் இருந்து ஊா் திரும்பியுள்ளனா். அட்டகட்டி மலைப் பாதையில் 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரத்தில் இருந்த பாறை மீது மோதியது.

இதில், தலையில் படுகாயமடைந்த சோனி ஜேக்கப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த ஜோஷிதாஸ், மோகனாம்பாள், ஆல்பா்ட் ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து காடம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →