கோவை எஸ்.பி. கே.காா்த்திகேயன் பணியிடமாற்றம்
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தாம்பரம் காவல் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தாம்பரம் காவல் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதனடிப்படையில் தமிழக காவல் துறையில் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் புதன்கிழமையும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதன்படி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றி வந்த அல்லாடிப்பள்ளி பவன்குமாா் ரெட்டி கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இதேபோல, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய கே.காா்த்திகேயன், தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இந்த இரு அதிகாரிகளையும் பரஸ்பரம் பணியிடமாற்றம் செய்து, அதற்கான அதிகாரபூா்வ உத்தரவை தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலா் மணிவாசகம் வெளியிட்டுள்ளாா்.