ஈரோடு

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் தேசியத் தர மதிப்பீடு குழு ஆய்வு

தினமணி

ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய தர மதிப்பீடு குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இக்கல்லூரி, சுயமுன்னேற்றத்தை கருத்தில்கொண்டு, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுக்கு விண்ணப்பித்திருந்தது.
 அதன்படி, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயல்பாடுகளை கண்காணித்து, அதன் சுயவிளக்க அறிக்கையை சரிபார்த்து மதிப்பிட, மீரட் சி.சி.எஸ். பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.கே.சதுர்வேதி, குல்பர்கா பல்கலைக்கழக முன்னாள் டீன் ஒய்.எம்.ஜெயராஜ், பஞ்சாப் ஜே.சி.டி.ஏ.வி. கல்லூரி முதல்வர் ராஜேஸ்.கே.மகாஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
 நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், போதிக்கப்படும் கல்வியின் தரம் போன்றவை குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் கேட்டறியப்பட்டது.
 இறுதியில், தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையை கல்லூரி முதல்வர் குப்புசாமியிடம் அக்குழுவினர் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT