ஈரோடு

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் நலத் திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தார்

DIN

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கஸ்பாபேட்டை கணபதிபாளையம், ஈஞ்சம்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்டப் பணிகளை எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணி தொடங்கி வைத்தார்.
கஸ்பாபேட்டை ஊராட்சி, செல்லப்பம்பாளையம் முதல் கீழ்பவானி வாய்க்கால் வரை  புதிய தார்சாலை அமைக்க நபார்டு திட்டத்தின்கீழ் ரூ. 39.2 லட்சம், கணபதிபாளையம் ஊராட்சி சாஸ்திர்நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க ரூ.58. 6 லட்சம், ஈஞ்சம்பள்ளி ஊராட்சி பொன்னம்பாளையம் முதல் கண்ணுடையாம்பாளையம் வரை தார் சாலை அமைக்க ரூ.46.2லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பணிகளை  எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி தொடங்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றியத் துணைத் தலைவர் கணபதி, ஆவின் இயக்குநர் அசோக், ஒப்பந்ததாரர் சக்திவேல்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, சிவசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT