ஈரோடு நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையின் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் எம்.சண்முகன் தலைமை வகித்தார். கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் கார்த்திக் வரவேற்றார். நந்தா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் குப்புசாமி, நந்தா கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் விஸ்வநாதன், முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம், கல்லூரிச் செயலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வாசவி கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், "அன்றாட வாழ்வில் வேதியியலின் பங்கு' குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில், 100 மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.